×

விஷச்சாராயம் தயாரிக்க மெத்தனாலை விற்பனை செய்த 5 பேர் கைது

சென்னை : மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் விஷ சாராயம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மெத்தனாலை விற்பனை செய்த இளைய நம்பி உட்பட ஐந்து பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரத்தை சேர்ந்த இளையநம்பியின் சென்னை ரசாயன ஆலையில் இருந்து ஆயிரம் லிட்டர் மெத்தனால் விற்பனை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சென்னையில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விஷச்சாராயம் தயாரிக்க மெத்தனாலை விற்பனை செய்த 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ntri ,Marakkam ,Changalpat ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...