×

ஓராண்டுக்கு முன் சிறுமி கொலை: கைதான சித்தி பகீர் வாக்குமூலம்

சோளிங்கர்: சோளிங்கர் அருகே சிறுமி கொலை வழக்கில் அவரது தந்தை, சித்தி கைது செய்யப்பட்டனர். சொத்து முழுவதும் தனது குழந்தைகளுக்கே சேர வேண்டும் என்பதற்காக சிறுமியை கொன்றதாக அவரது சித்தி வாக்குமூலம் அளித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஸ் நிலைய பின்புறம் வசிப்பவர் சந்திரசேகர்(37), முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி சுமதி. இவர்களது மகள் ஹேம (6). இவர் பிறந்த 2 மாதங்களில் அவரது தாய் சுமதி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். மனைவி இறந்த சில மாதங்களில் சந்திரசேகர், திருவண்ணாமலை மாவட்டம் காட்டேரி கிராமத்தை சேர்ந்த ராதிகா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 ஆண், 1 பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு, சிறுமி ஹேம திடீரென மயக்கம் அடைந்ததாக கூறி சந்திரசேகரும், அவரது மனைவி ராதிகாவும் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஹேம ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சோளிங்கர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் ஹேமயின் பிரேத பரிசோதனை அறிக்கையில் முகத்தை அழுத்தியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது. இதையடுத்து சோளிங்கர் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்தனர். அதில், சந்திரசேகரின் 2வது மனைவி ராதிகா, ஹேமயின் முகத்தை துணியால் அழுத்தி கொன்றுவிட்டு மயங்கியதாக கூறி நாடகமாடியது தெரியவந்தது.

இந்த உண்மைகளை போலீசாரிடம் மறைத்து கொலைக்கு உடந்தையாக சந்திரசேகரும் இருந்துள்ளார். இதையடுத்து இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: தனது கணவர் பெயரில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் தனக்கு பிறந்த குழந்தைகளுக்கே சேர வேண்டும். முதல் மனைவியின் மகளுக்கு சேரக்கூடாது என ராதிகா திட்டமிட்டார். அதன்படி சிறுமியை தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார் என்றனர். இதனிடையே கைதான தம்பதி இருவரையும் மாஜிஸ்திரேட் முன் நேற்றிரவு ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post ஓராண்டுக்கு முன் சிறுமி கொலை: கைதான சித்தி பகீர் வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Siddhi Bakir ,Zollinger ,Sidhi ,Solinger ,
× RELATED சோளிங்கர் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.70,500 பறிமுதல்