×

நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம்: கர்நாடகா முதல்வர் பதவி விவகாரத்தில் காங்கிரஸ் முதுகில் குத்தமாட்டேன்.. கர்நாடக காங். தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி..!!

டெல்லி: கர்நாடகா முதல்வர் பதவி விவகாரத்தில் காங்கிரஸ் முதுகில் குத்தமாட்டேன் என்று என டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடகா முதலமைச்சர் தேர்வில் குழப்பம் நீடிக்கும் நிலையில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் டெல்லி பயணம் மேற்கொள்கிறார். நேற்று சித்தராமையா டெல்லி சென்றிருந்த நிலையில், தற்போது டி.கே.சிவகுமார் டெல்லி செல்கிறார். சோனியா காந்தியை சந்திக்க டெல்லி செல்லும் முன் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், கர்நாடகாவில் 135 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ஒற்றுமையாக உள்ளோம். என்னை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நான் ஒரு பொறுப்பான மனிதன். காங்கிரஸ் எங்களுடையது; ஒன்றுபட்ட எங்கள் வீட்டின் எண் 135. கட்சி எம்.எல்.ஏக்களிடையே பிளவை ஏற்படுத்த விரும்பவில்லை; யாரையும் மிரட்டவும் மாட்டேன் என்று கூறினார். எம்.எல்.ஏ.க்கள் தன்னை ஆதரித்தாலும், ஆதரிக்காவிட்டாலும் அவர்கள் முதுகில் குத்தமாட்டேன், அச்சுறுத்தமாட்டேன். காங்கிரஸ் தலைமை முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றார். தொடர்ந்து பேசிய அவர், மோசமான கருத்துடன் வரலாற்றில் தவறான இடத்தை பிடிக்க நான் விரும்பவில்லை.

எங்களது அடுத்த சவால் மக்களவை தேர்தலில் 20 தொகுதியில் வெற்றி பெறுவதே. காங்கிரஸ் கட்சி எனது தாய்.. குழந்தைக்கு என்ன செய்ய வேண்டும் என்று தாய்க்கு தெரியும். கர்நாடகா முதல்வர் பதவி தொடர்பான பேச்சுவார்த்தைக்காக நான் டெல்லி செல்கிறேன். கட்சி தலைமை என்னை மட்டும் வரச்சொன்னதால் நான் தனியாக செல்கிறேன். நான் மிகவும் பொறுப்பானவன் என்பதால், அனைவரின் நலனை பாதுகாப்பது அவசியம். சோனியா காந்தியின் அழைப்பை ஏற்று டெல்லி செல்வதாக டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

The post நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம்: கர்நாடகா முதல்வர் பதவி விவகாரத்தில் காங்கிரஸ் முதுகில் குத்தமாட்டேன்.. கர்நாடக காங். தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Karnataka ,CM ,Karnataka Congress ,President ,D.K.Sivakumar ,Delhi ,DK Shivakumar ,Chief Minister ,Dinakaran ,
× RELATED 7 தொகுதிகளிலும் நாளை மறுநாள்...