கமுதி: கமுதி முத்திருளாண்டி சேர்வை தெருவில் வசிக்கும் ஆனந்தராஜ் (32), நேற்று தனது வீட்டின் முன்பு சாலையில் நின்று மனைவியுடன், தகராறு செய்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலர் வெங்கடேஷ், அங்கு வந்துள்ளார். ‘சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம், காவல் நிலையத்தில் பேசிக் கொள்ளலாம்’ என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ஆனந்தராஜ், எங்க குடும்பப் பிரச்னையில் தலையிட நீ யார் என்று மரியாதை குறைவாக பேசி, பணி செய்ய விடாமல் தடுத்ததோடு, அரிவாளை காட்டி வெங்கடேசுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து காவலர் வெங்கடேஷ், கமுதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆனந்தராஜை கைது செய்தனர்.
The post போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது appeared first on Dinakaran.