×

செல்போன் நிறுவனத்தின் இரும்பு,பிளாஸ்டிக் பைப்புகள் திருட்டு

 

திருமங்கலம்: திருமங்கலத்தில் தனியார் செல்போன் நிறுவனம் 5ஜி கேபிள் பதிக்க வைத்திருந்த 1.5 லட்சம் மதிப்புள்ள இரும்பு,பிளாஸ்டிக் பைப்புகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் கடந்த 9 மாதகாலமாக திருமங்கலம் நகர் பகுதியில் தனியார் செல்போன் நிறுவனத்தின் 5ஜி கேபிள் பதிக்கும் பணியில் இவரது நிறுவனத்தினை சேர்ந்த திருப்பரங்குன்றம் ராதாகிருஷணன் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டு இருந்தனர்.

இவர்கள் பதிக்க தேவைப்படும் இரும்பு பைப்புகளை திருமங்கலம் மதுரை ரோட்டில் மறவன்குளத்தில் ஒரு இடத்திலும், முனிசீப்கோர்ட் ரோட்டில் மற்றொரு இடத்திலும் குவித்து வைத்திருந்தனர். இந்தநிலையில் இந்த இரும்பு பைப்புகள் மற்றும் பிளாஸ்டிக் பைப்புகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு சுமார் ரூ.1.5 லட்சமாகும். இது குறித்து மேலாளர் சிவக்குமார் கொடுத்த புகாரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post செல்போன் நிறுவனத்தின் இரும்பு,பிளாஸ்டிக் பைப்புகள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Tirumangalam ,
× RELATED ரயில்வே ஸ்லீப்பர் கட்டை தயாரிக்க 2,830...