×

மகளிர் காவல் நிலையங்களில் கூடுதல் பெண் போலீஸ் நியமிக்க கோரிக்கை

 

பழநி: தமிழகத்திலுள்ள மகளிர் காவல் நிலையங்களுக்கு கூடுதல் பெண் போலீஸ் நியமிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மையம் சார்பில் தமிழ்நாடு முதல்வருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, தமிழக காவல்துறை இந்திய மாநிலங்களில் காவல் துறைகளில் சிறந்ததாக திகழ்வதுடன் 2ம் இடம் வகிக்கிறது. ஆனால் மகளிர் காவல் நிலையங்களில் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப மகளிர் போலீசார் இல்லாத நிலை நிலவுகிறது. தமிழகத்தில் 196 மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. இவற்றில் 13 ஆயிரம் பேர் மட்டுமே ெபண் காவலர்களாக பணிபுரிகின்றனர். தமிழகத்தில் 6 சட்டம்- ஒழுங்கு அலுவலகத்திற்கு 1 மகளிர் காவல் நிலையம் என்ற முறை பின்பற்றப்படுகின்றது.

மகளிர் காவல் நிலையங்களில் மகளிர் காவலர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் பணிச்சுமை, விடுமுறை கிடைக்காமை, மனஉளைச்சல், உடல்ரீதியான சிரமங்களுக்கு உட்படுவதால் பலர் விருப்ப ஓய்வு மற்றும் வேலையை ராஜினாமா செய்யும் நிலைமையில் உள்ளனர். எனவே, பணி சுமையை குறைக்க கூடுதல் பெண் போலீசார் நியமிக்கப்பட வேண்டும். தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் காவலர்களில் மகளிர் காவல்நிலையத்திற்கு அதிக அளவில் பணி நியமிக்க வேண்டும். அதுபோல் 1 தாலுகாவிற்கு 2 மகளிர் காவல் நிலையம் அமைக்க தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post மகளிர் காவல் நிலையங்களில் கூடுதல் பெண் போலீஸ் நியமிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Palani ,Tamil Nadu ,Ayakudi ,Dinakaran ,
× RELATED ஆயக்குடி கொய்யாவிற்கு புவிசார்...