×

சாத்தான்குளம் யூனியனில் தற்செயல் விடுப்பு எடுத்து பஞ். செயலர்கள் போராட்டம்

சாத்தான்குளம், மே 16: சாத்தான்குளம் யூனியனில் கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ். செயலர்கள், தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பஞ். செயலர்களை டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தேர்வு செய்ய வேண்டும். பஞ். செயலர்களுக்கு பணிவிதி அரசாணை வெளியிட வேண்டும். தேர்வுநிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பஞ்.செயலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தை நேற்று தொடங்கி உள்ளனர். வருகிற 19ம் தேதி வரை இப்போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி சாத்தான்குளம் யூனியனில் 23 பஞ். செயலர்களில் 18 பேர், நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பஞ்சாயத்துகளில் பணிகள் பாதிக்கப்பட்டன.

The post சாத்தான்குளம் யூனியனில் தற்செயல் விடுப்பு எடுத்து பஞ். செயலர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Panj ,Satankulam ,Union ,Satankulam Union ,Panj.… ,Dinakaran ,
× RELATED காதலியின் கணவனை கொன்ற அதிமுக பஞ்.தலைவர்