×

சிறுமியை கடத்தி பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது

புதுச்சேரி, மே 16: புதுச்சேரி, தவளக்குப்பம் அருகே பூரணாங்குப்பத்தை சேர்ந்த புண்ணியகோடி மகன் பாலமுருகன் (22). பிளம்பரான இவர் கிராமப்புற பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் பழகியதாக கூறப்படுகிறது. இதனிடையே சில தினங்களுக்கு முன்பு அச்சிறுமி தனது உறவினர் வீட்டுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பிறகு அவரை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் சிறுமியை பல இடங்களில் தேடி வந்தனர். ஆனால் அவரைப்பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இதையடுத்து ஏமாற்றமடைந்த சிறுமியின் பெற்றோர், தவளக்குப்பம் காவல் நிலையத்தில் முறையிட்டனர். எஸ்ஐ திருமுருகன் தலைமையிலான போலீசார் சிறுமி கடத்தல் பிரிவின்கீழ் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அச்சிறுமியுடன் நெருங்கி பழகிய பாலமுருகன், அவரை கடத்திச் சென்று தனது உறவினர் வீட்டில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. தகவலின்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் அச்சிறுமியை மீட்டு பாலமுருகனை சுற்றிவளைத்தனர். மீட்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், அவரை பாலாத்காரம் செய்த பாலமுருகன் மீது போக்சோ சட்டப்பிரிவின்கீழ் வழக்குபதிந்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

The post சிறுமியை கடத்தி பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Bocso ,Puducherry ,Balamurugan ,Punnyakodi ,Poorananguppam ,Tavalkuppam ,Pocso ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு