×

கணவரை பிரிந்து வாழ்ந்த தோழிகள் ஒரே நாளில் எஸ்கேப்

திருமங்கலம்: கணவரை பிரிந்து வாழ்ந்த தோழிகள், ஒரே நாளில் மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள கற்பகநகரைச் சேர்ந்தவர் ரோஜா (32). இவரது கணவர், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை கெங்கம்பட்டியைச் சேர்ந்த மணி. கணவன், மனைவி இருவரும் கோவையில் வசித்து வந்தனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரை பிரிந்து, திருமங்கலத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு ரோஜா வந்துவிட்டார். இவரது தோழியான திருமங்கலம் காமராஜர் வடபகுதியைச் சேர்ந்த கார்த்திக் பெருமாள் மனைவி காயத்ரி (27). இவரும் கணவரை பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில், தோழிகள் இருவரும் இணைந்து பூ கட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 12ம் தேதி மாயாண்டி, அவரது மனைவி காமாட்சி வழக்கம் போல் பூ வியாபாரத்திற்கு வெளியூர் சென்றுவிட்டனர். ரோஜா தனது மகளுடன் ஊரில் உள்ள கோயிலுக்கு செல்வதாக கூறிச் சென்றார். அதன்பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும், அவரை காணவில்லை. இது குறித்து காமாட்சி கொடுத்த புகாரில், திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ரோஜாவின் தோழி காயத்ரியும் 2 குழந்தைகளுடன் அதே 12ம் தேதி மாயமாகியுள்ளார். இருவரது செல்போன்களும் சுவிட்ச்ஆப்பில் உள்ளது.

The post கணவரை பிரிந்து வாழ்ந்த தோழிகள் ஒரே நாளில் எஸ்கேப் appeared first on Dinakaran.

Tags : Tirumangalam ,Madurai District ,Thirimangalam ,
× RELATED திருமங்கலத்தில் பெண்ணை தாக்கி நகை...