×

மாணவி தூக்கிட்டு தற்கொலை

 

கோவை: கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த 17 வயது நிரம்பிய பிளஸ் 2 படித்து முடித்த மாணவி கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ பட்டப்படிப்பில் சேர விண்ணப்பம் செய்திருந்தார். தற்போது விடுமுறை என்பதால் பகுதி நேர வேலைக்கு செல்ல விரும்பினார்.

ஆனால், அவரது பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை என தெரிகிறது. இதனால், சில நாட்களாக மாணவி கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். வீட்டின் கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post மாணவி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Peelamedu ,Dinakaran ,
× RELATED கோவை காந்திபுரம் நகர பேருந்து...