×

தாழையூத்தில் நாளை மின்தடை

நெல்லை, மே 14: மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக தாழையூத்து, தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (15ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.இதுகுறித்து நெல்லை கிராமப்புற செயற்பொறியாளர் வெங்கடேஷ்மணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தாழையூத்து துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (15ம் தேதி) நடக்கிறது.

இதன் காரணமாக மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

The post தாழையூத்தில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Tags : Dachnallur ,Dachanallur ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…