×

ஜி20 மாநாட்டை சீர்குலைக்க ஊடுருவிய தீவிரவாதிகள் சதி முறியடிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் தீவிரவாதிகளின் ஊடுருவல் பாதுகாப்பு படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், உரி செக்டாரில் எல்லைக்கட்டுப்பாடு கோடு வழியாக நேற்று அதிகாலை தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இதனை பார்த்த வீரர்கள் அவர்களை திரும்பி செல்லும்படி எச்சரித்தனர். ஆனால் அவர்கள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

இதனிடையே பாகிஸ்தான் ராணுவம் சார்பில் தீவிரவாதிகளுக்கு உதவும் வகையில் குவாட்காப்டர்(quadcopter) பறக்கவிடப்பட்டது. இதன் மீது வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதை அடுத்து பாகிஸ்தான் ராணுவம் அதனை வாபஸ் பெற்றது. ஜம்முவில் ஜி20 கூட்டத்தை சீர்குலைப்பதற்காக தீவிரவாதிகள் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post ஜி20 மாநாட்டை சீர்குலைக்க ஊடுருவிய தீவிரவாதிகள் சதி முறியடிப்பு appeared first on Dinakaran.

Tags : G20 ,Srinagar ,Jammu and ,Kashmir ,Baramulla ,Uri ,Dinakaran ,
× RELATED புல்வாமாவில் என்கவுன்டர் தீவிரவாதி சுட்டு கொலை