×

கே.பாலகிருஷ்ணன் பேச்சு; பஞ்சமி நில மீட்பு போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தும்

சென்னை: பஞ்சமி நிலங்களை மீட்கும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தும் என, அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட குழு சார்பில், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் கார்ல் மார்க்ஸ் 205வது பிறந்தநாள் கொண்டாட்டம், அரசியல் விளக்க பொதுக்கூட்டம், கட்சி நிதியளிப்பு என முப்பெரும் விழா நடந்தது.

இக்கூட்டத்தில், அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், ‘‘தமிழகத்தில் 4 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பஞ்சமி நிலம் உள்ளது. இந்த பஞ்சமி நிலத்தை 200 ஆண்டுகளுக்கு முன்னர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தலித் மக்களுக்கு ஒதுக்கினார். அந்த நிலங்களை மீட்டு கொடுங்கள் என உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் ஏராளமாக உள்ளது. இனி பஞ்சமி நிலங்களை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.வரும் 16ம் தேதி விழுப்புரத்தில் ஒரு சிறப்பு மாநாட்டை நடத்த உள்ளோம். இதற்கு மேலும் சாதிய கொடுமைகளை அனுமதிக்க முடியாது. அடிப்படை சமூக மாற்றத்தை வலியுறுத்தி விழுப்புரத்தில் நடைபெறும் சிறப்பு மாநாட்டில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.

The post கே.பாலகிருஷ்ணன் பேச்சு; பஞ்சமி நில மீட்பு போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தும் appeared first on Dinakaran.

Tags : K. Balakrishnan ,Marxist party ,Panchami ,Chennai ,State Secretary of the ,Marxist ,
× RELATED தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்...