×

வத்தலக்குண்டுவில் ரூ.10 நாணயங்களை பெற மறுக்கும் வியாபாரிகள்

வத்தலக்குண்டு. மே 13: வத்தலக்குண்டு காந்திநகர் மெயின் ரோட்டில் டீக்கடை வைத்திருப்பவர் சலீம் (50). இவர் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ரூ.10 நாணயங்களை தொடர்ச்சியாக வாங்குகிறார். ஆனால் வாடிக்கையாளர்கள் அவரிடம் இருந்து ரூ.10 நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள் என கூறப்படுகிறது. இதுகுறித்து சலீம் கூறும்போது, பலசரக்கு கடைக்கும் சென்று எனக்கு தேவையான சீனி, கடலைமாவு உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொண்டு 10 ரூபாய் நாணயங்களை கொடுத்தால் வாங்க மறுக்கிறார்கள்.

என் கடைக்கு வருவோருக்கு ஒன்று அல்லது இரண்டு நாணங்களை மட்டுமே கொடுக்க முடிகிறது. இதனால் என்னிடம் இந்த நாணயங்கள் தற்போது அதிக அளவில் சேர்ந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த பலரும் என்னைப்போலவே பத்து ரூபா காசுகளை மாற்ற முடியாமல் தவிக்கின்றனர். எனவே, இதுபோன்ற மக்களிடம் 10 ரூபாய் நாணயம் எப்போதும் செல்லுபடியாகும் என்பது குறித்த விழிப்புணர்வை அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

The post வத்தலக்குண்டுவில் ரூ.10 நாணயங்களை பெற மறுக்கும் வியாபாரிகள் appeared first on Dinakaran.

Tags : Vatthalakundu ,Salim ,Gandhinagar Main Road, Wattalakundu ,Dinakaran ,
× RELATED வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை...