சென்னை: ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தனிப்படை அமைத்து ரவுடிகளை கைது செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் பெரும்புதூர் விஆர்பி சத்திரம் பகுதியைசேர்ந்த பிரபல ரவுடியான விக்னேஷ் குமார் (25) என்பவர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் 2 மான் கொம்புகளை பறிமுதல் செய்தனர். குற்ற வழக்கு தொடர்பாக விக்னேஷ்குமார் கடந்த ஏப்ரல் மாதம் முதல் சிறையில் இருந்து வருகிறார். மான் கொம்புகள் எப்படி வந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ரவுடி வீட்டில் பதுக்கிய மான் கொம்புகள் பறிமுதல் appeared first on Dinakaran.
