×

கனிவுடன் கவனித்து நோயாளிகள் நலம்பெற சேவையாற்றும் செவிலியர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ, அன்புமணி வாழ்த்து!!

சென்னை : உலக செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், அன்பும் அரவணைப்பும் சேர்த்து நோயாளிகளைக் கனிவுடன் கவனித்து அவர்கள் நலம்பெற சேவையாற்றும் செவிலியர் அனைவர்க்கும் #InternationalNursesDay வாழ்த்துகள்! காயமாற்றும் அவர்களது வாழ்வில் ஒளியேற்றிட நமது அரசு தொடர்ந்து செயலாற்றிடும்! என்று பதிவிட்டுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்தியில்,”புனிதமான சேவையில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செவிலியர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில், “உயிர்காக்கும் உன்னத பணி செய்யும் செவிலியர்கள் போற்றப்பட வேண்டும் : உலகின் மிக உன்னதமான பணி உயிர் காக்கும் பணி தான். ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்களும், செவிலியர்களும் தான். இரவும் பகலும் பார்க்காமல் நோயர்களின் நலனைக்காப்பதில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் அனைத்து நைட்டிங்கேல்களுக்கும் எனது செவிலியர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ” மருத்துவமனைகளில் நோயாளிகளை மருந்துகளோடும், மாத்திரைகளோடும் மட்டுமின்றி அன்பாலும், புன்னகையாலும் அக்கறையோடு கவனித்து குணம்பெற செய்யும் அனைத்து செவிலியர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த செவிலியர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post கனிவுடன் கவனித்து நோயாளிகள் நலம்பெற சேவையாற்றும் செவிலியர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ, அன்புமணி வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : Kani ,CM. G.K. ,stalin ,Chennai ,Chief Minister ,World Nurses Day ,CM. G.K. Stalin ,Vigo ,Annepamarani ,Dinakaran ,
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...