×

ராசிபுரம் அருகே நிலத்தை அபகரித்த அதிமுக கவுன்சிலரின் கணவரை தட்டிக் கேட்ட ஆசிரியர் மீது தாக்குதல்..!!

நாமக்கல்: ராசிபுரம் அருகே நிலத்தை அபகரித்த அதிமுக கவுன்சிலரின் கணவரை தட்டிக் கேட்ட தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்படும் காட்சி வெளியாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட அளவாய்பட்டி ஊராட்சியில் வசிக்கும் கண்ணன் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமாக வீடு மற்றும் தரிப்பட்டறைகள் உள்ள நிலையில் அளவாய்பட்டி ஊராட்சியின் 3 வார்டு அதிமுக கவுன்சிலரின் கணவர் சவிச்சந்திரன் என்பவர் கண்ணனின் நிலத்தை அபகரித்து வீடு கட்டும் பணியை தொடங்கியதாக கூறப்படுகிறது.

கடந்த 2018ம் ஆண்டு காவல் நிலையத்தில் கண்ணன் அளித்த புகாரில் நிலங்களை அளந்துதரும் வரை எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என போலீசார் அறிவுறுத்திய நிலையில் மீண்டும் வீடுகட்டும் பணியை தொடங்கிய ரவிச்சந்திரனிடம் கண்ணன் சென்று தன் கையிலிருந்த சங்கை ஊதியவாறு தன்னுடைய நிலத்தை ஆக்கிரமித்தது ஏன் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக கவுன்சிலரின் கணவர் கீழே கிடந்த செங்கலை எடுத்து பள்ளி ஆசிரியரை தாக்கியுள்ளார். அதிமுக கவுன்சிலரின் கணவர் தாக்கியதில் காயமடைந்த பள்ளி ஆசிரியர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ராசிபுரம் அருகே நிலத்தை அபகரித்த அதிமுக கவுன்சிலரின் கணவரை தட்டிக் கேட்ட ஆசிரியர் மீது தாக்குதல்..!! appeared first on Dinakaran.

Tags : Rasipuram Namakkal ,Rashipuram ,Incarnate ,
× RELATED நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே...