- திமுக அரசு இருமுறை சாதனையாளர் விளக்கக்காட்சி மாநாடு
- அவினாசி
- திருப்பூர் வடக்கு யூனியன் திமுக
- திராவிட முனேத்திரம் ஊராட்சி
- Perumanallur
- திமுக அரசு
- தின மலர்
அவிநாசி,மே12: திருப்பூர் வடக்கு ஒன்றிய தி.மு.க சார்பில், திராவிட முன்னேற்ற கழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப்பொதுக்கூட்டம் பெருமாநல்லூர் நால் ரோடு பகுதியில் திருப்பூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. திமுக மாவட்ட பிரதிநிதி மற்றும் பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சிடிசி.வேலுச்சாமி வரவேற்றார். ஒன்றிய அவைத்தலைவர் வீரக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் சண்முகம், மணி, பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தாமணிவேலுச்சாமி, ஒன்றிய துணைச்செயலாளர்கள் அண்ணாதுரை,மணிமுத்து, மீனாட்சி திருமூர்த்தி, ஒன்றிய பொருளாளர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தலைமைக் கழக பேச்சாளர் கோட்டூர் முருகன், வடக்கு மாவட்ட திமுக செயலாளர்,திருப்பூர்தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.செல்வராஜ், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் திராவிடமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் உமாமகேஸ்வரி, கணக்கம்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், திருப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் தேவி நந்தகுமார், எல்.பி.எப்.ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட அமைப்புச் செயலாளர் வேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர் ரத்தினாம்பாள்சிவசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நந்துவேலுசாமி, ஊராட்சி துணைத்தலைவர்கள் வள்ளிபுரம் காந்திமதி, பட்டம்பாளையம் சாமிநாதன், மேற்குபதி அய்யப்பன் ஆகியோர் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள் குறித்து சிறப்புரையாற்றினர்.
The post திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப்பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.