×

தான் அமைத்த மின்வேலியில் சிக்கி பலியான கட்டிட மேஸ்திரி

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே கும்மனூர் சூடனூர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன்(30). கட்டிட மேஸ்திரி. இவர்களுக்கு கிராமத்தின் அருகே வனத்தையொட்டி தோட்டம் உள்ளது. அங்கு, நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் தோட்டத்திற்குள் புகுந்து நெற்பயிர்களை நாசம் செய்து வந்தன.

இதனால், நெற்பயிரை காப்பாற்ற மின்வேலி அமைத்திருந்தனர். இதனிடையே நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற நவீன், மின்வேலி இருப்பதை மறந்து நடந்து சென்றுள்ளார். அப்போது, மின்வேலியில் கால் வைத்ததில், உடலில் மின்சாரம் பாய்ந்து அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

The post தான் அமைத்த மின்வேலியில் சிக்கி பலியான கட்டிட மேஸ்திரி appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Sudanur ,Kummanur ,Panchapalli ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்