×

பற்களை பிடுங்கிய விவகாரம் 2 பேரிடம் 7 மணி நேரம் விசாரணை

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் வழக்கு விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் முக்கிய சாட்சியாகவுள்ள பாதிக்கப்பட்ட மாரியப்பன் மற்றும் ரூபன் ஆகியோர் நேற்று நெல்லையிலுள்ள சிபிசிஐடி ஆர்கனைஸ்டு கிரைம் யூனிட் அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஏடிஎஸ்பி சங்கர் செல்போன் மூலம் அவர்களிடம் விசாரித்தார். இந்த விசாரணை நேற்று காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்தது. இந்நிலையில் பற்கள் பிடுங்கப்பட்டவர்களை பரிசோதித்து சான்றிதழ் வழங்கிய அம்பை அரசு மருத்துவமனை டாக்டர்களிடம் சிபிசிஐடி ஏடிஎஸ்பி சங்கர் நேரடியாக விசாரணை நடத்தினார். சாட்சிகள் அளித்த தகவலை கொண்டு அம்பை தாலுகா அலுவலகத்திலும், அம்பை அரசு மருத்துவமனையிலும் விசாரணை நடத்தி சில ஆவணங்களை ஆர்கனைஸ்டு கிரைம் யூனிட் போலீசார் சேகரித்தனர்.

The post பற்களை பிடுங்கிய விவகாரம் 2 பேரிடம் 7 மணி நேரம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Nellai ,ASP ,Balveersingh ,Ambasamudram ,Dinakaran ,
× RELATED நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில்...