×

இளம் பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியவர் கைது

மூணாறு, மே 11: ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாலேஷ்வர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் நாயக் (38). இவர் வேலை தேடி மூணாறு அருகே மாங்குளம் ஊராட்சிக்கு கடந்த 2018ம் ஆண்டு வந்துள்ளார். அங்கு கூலி வேலை செய்து வந்த இவர் ஒரு மாணவியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். மேலும் இருவரும் தனியாக இருந்த நேரங்களில் பெண்ணிற்கு தெரியாமல் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.பின்னர் அந்த ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளான். இதுகுறித்து புகாரில் மூணாறு போலீசார் ஒடிசாவுக்கு தப்பியோடிய ராஜ்குமார் நாயக்கை கைது செய்தனர். பின்னர் ராஜ்குமார் நாயக்கை மூணாறு கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post இளம் பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Munnar ,Rajkumar Naik ,Baleshwar district ,Odisha ,
× RELATED மனநலம் குன்றிய சிறுமி பலாத்காரம் குற்றவாளிக்கு 106 ஆண்டுகள் சிறை