×

மயிலாடுதுறை கலெக்டர் தகவல் வைத்தீஸ்வரன் கோயிலில் அடி பிரதட்சணம் சிறப்பு வழிபாடு

 

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் வைத்தியநாதசுவாமி தையல் நாயகி அம்பாள் உடனாகிய கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். மேலும் 18 சித்தர்களில் முதன்மையான தன்வந்திரி சித்தர் இக்கோயிலில் ஜீவசமாதி அடைந்துள்ளார். இத்தகைய புகழ்பெற்ற கோயிலுக்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இத்தகைய புகழ்பெற்ற கோயிலில் செய்வாய் அடிபிரதட்சணம் விழாவையொட்டி வைத்தியநாதசுவாமி தையல் நாயகி அம்பாள் செல்வ முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை தருமபுர ஆதீனம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. தொடர்ந்து தருமபுர ஆதீனம் அடி பிரதட்ணம் செய்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார். அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.

The post மயிலாடுதுறை கலெக்டர் தகவல் வைத்தீஸ்வரன் கோயிலில் அடி பிரதட்சணம் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Vaideeswaran Temple ,Sirkazhi ,Mayiladuthurai District ,Vaidyanathaswamy ,Ambal.… ,
× RELATED செம்மங்குடி ஊராட்சிக்கு சீரான குடிநீர்