×

(தி.மலை) போக்சோவில் கைதான கராத்தே மாஸ்டர் மீது குண்டாஸ் பாய்ந்தது தண்டராம்பட்டில் மேலும் ஒரு புகார் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு

தண்டராம்பட்டு, மே 10: சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் போக்சோவில் கைதான கராத்தே மாஸ்டர் மீது, தண்டராம்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மேலும் ஒரு புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கராத்தே மாஸ்டரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருவண்ணாமலை கலெக்டர் உத்தரவிட்டார். விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார்(23), கராத்தே மாஸ்டர். இவர் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சென்று மாணவ, மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி அளித்து கொண்டிருந்தார். அப்போது பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் செல்போன் நம்பரை வாங்கி ஆபாசமாக பேசியதாகவும், பயிற்சியின்போது சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்காக புகாரின்பேரில் திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் பிரவீன்குமார் மீது போக்சோவ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் கொடுத்த புகாரில், மற்றொரு பள்ளியில் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி அளித்த பிரவீன்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. கராத்தே மாஸ்டர் மீது புகார்கள் குவிந்து வருவதால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன், கலெக்டர் பா.முருகேஷூக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் நேற்று உத்தரவிட்டதாக இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தெரிவித்தார்.

The post (தி.மலை) போக்சோவில் கைதான கராத்தே மாஸ்டர் மீது குண்டாஸ் பாய்ந்தது தண்டராம்பட்டில் மேலும் ஒரு புகார் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு appeared first on Dinakaran.

Tags : T.Malai ,Karate ,Bokso ,Thandarambat ,Thandarampatu ,Pokso ,Th.Malai ,
× RELATED சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது