நாகப்பட்டினம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாஜக ஆட்சியை அகற்றுவோம், நாட்டையும் மக்களையும் பாதுகாப்போம் என்ற நாடு தழுவிய நடைபயண பிரச்சார இயக்கம் நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் நேற்று வந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாஜக ஆட்சியை அகற்றுவோம், நாட்டையும் மக்களையும் பாதுகாப்போம், மாற்றத்தை நோக்கி என்ற கொள்கையுடன் நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இதன்படி நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த நடைபயண குழுவினர் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
இந்திய கம்யூனிஸ்கட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சரபோஜி தலைமை வகித்தார். நகர செயலாளர் குணாநிதி முன்னிலை வகித்தார். பாஜக ஆட்சியினால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட விளைவுகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறினர். விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் கதிர்நிலவன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் புதியவன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
The post பாஜ ஆட்சியை அகற்றுவோம் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் நடைபயண பிரச்சார இயக்கம் appeared first on Dinakaran.