×

மகளிர் காங்கிஸ் போராட்டம்

 

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கேட்டு, பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் மெழுகுவர்த்தி ஏந்தி நேற்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளியம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர்கள் விஜயா, வனிதா, மாவட்ட பொருளாளர் பூங்கொடி, மாவட்ட செயலாளர் மாதம்மாள் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளரும், முன்னாள் எம்பியுமான தீர்த்தராமன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இந்த போராட்டத்தின் போது, மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கேட்டு ஏராளமான பெண்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெய்சங்கர், நரேந்திரன், சண்முகம், மாவட்ட பொது செயலாளர் குமரவேல், ஐஎன்டியூசி நிர்வாகிகள் முத்து, ராஜாங்கம், ரமேஷ், மாவட்ட இலக்கிய அணி தலைவர் முருகவாசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஐஎன்டியூசி போக்குவரத்து தொழிற்சங்க பொது செயலாளர் தங்கவேல் நன்றி கூறினார்.

The post மகளிர் காங்கிஸ் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Women's Congis Struggle ,Darmapuri ,Darmapuri District Women Congress ,PSNL ,Dinakaran ,
× RELATED தர்மபுரி அருகே பரபரப்பு கோவை நகைக்கடை...