×

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நீதிமன்ற ஊழியர் மயங்கி விழுந்து பலி

மதுரை, மே 10: மதுரை மேல பொன்னகரம், கார்ப்பரேஷன் காலனி 4வது தெருவை சேர்ந்தவர் சங்கரன் (57). இவர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில், கூடுதல் நீதிமன்ற அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் அழகரை தரிசனம் செய்ய, நத்தம் ரோட்டில் உள்ள ஆயுதப்படை மைதானம் வந்தார். பின்னர், அங்குள்ள மினரல் வாட்டர் பிளா ண்ட் அருகே திடீரென்று மயங்கி விழுந்தார்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சங்கரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மனைவி கோமதி அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நீதிமன்ற ஊழியர் மயங்கி விழுந்து பலி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Armed Forces ,Ground ,Sankaran ,4th Street, Corporation Colony, Ponnakaram, Madurai ,Madurai Armed ,Forces ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு