- Edapadi
- சென்னை
- அரசுப் பொதுச் செயலாளர்
- எடப்பாடி பழனிசாமி
- குடவாசல்
- மன்னார்குடி
- நன்னிலம்
- நீடாமங்கலம்
- நீடாமங்கலம்
- திருவாரூர்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல், மன்னார்குடி, நன்னிலம், நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், வலங்கைமான், கூத்தாநல்லூர் என அனைத்து தாலுகாக்களிலும் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் பருத்தி மற்றும் 10 ஆயிரம் ஏக்கரில் எள் பயிரிடப்பட்டு உள்ளதாகவும், பயிர்கள் நன்கு விளைந்து மகசூல் எடுக்க வேண்டிய நேரத்தில் கோடை மழையினால் பயிர்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
பருத்தி மற்றும் எள் பயிரிடப்பட்ட திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் போன்ற டெல்டா மாவட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். பயிர் பாதிப்பை முழுமையாக கணக்கெடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும் வெள்ள பாதிப்புகளை பார்வையிட அனுப்பி வைக்க வேண்டும்.
The post மழையால் பாதிக்கப்பட்ட பயிர் சேதத்திற்கான நிவாரணத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.