×

தாமிரபரணியில் குளித்தபோது சென்னை வாலிபர்கள் 2 பேர் மூழ்கி பலி

பேட்டை: சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த புஷ்பராஜின் மகன் சக்தி (25). சென்னையில் ரயில்வே மெயில் சர்வீஸ் தற்காலிக ஊழியர்.இவர் தனது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலியுடன் நெல்லை அடுத்த மேலதிருவேங்கடநாதபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். இவர்களது திருமணத்தை நடத்தி வைக்க சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்து நண்பர்கள் ஸ்ரீராம், வினோத், அருண் நேற்றுஅங்கு வந்தனர். 4 பேரும் தாமிரபரணி ஆற்றுக்கு சென்று குளித்தனர். ஆழமான பகுதிக்கு சென்ற ஸ்ரீராம், வினோத், அருண் நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதில் வினோத்தை மட்டுமே மீட்க முடிந்தது. தீயணைப்பு படையினர் வந்து அருண், ஸ்ரீராம் ஆகியோரது சடலங்களை மீட்டனர்.

The post தாமிரபரணியில் குளித்தபோது சென்னை வாலிபர்கள் 2 பேர் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Tags : Tamirabarani ,Pettah ,Shakti ,Pushparaj ,Raipettah, Chennai ,Railway Mail Service ,Chennai ,Tamiraparani ,
× RELATED தா.பேட்டை அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை