×

குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்த பைக் திருடிய ரவுடி கைது

சென்னை: தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையை சேர்ந்தவர் அங்கித் சுரானா (26). நகைக்கடை அதிபரான இவர், கடந்த 5ம் தேதி தனது வீட்டின் அருகே உள்ள நகைக்கடை முன், பைக்கை நிறுத்தி இருந்தார். பிறகு மாறுநாள் காலையில் தனது பார்த்த போது, பைக் மாயமாகி இருந்தது. இதுகுறித்து அங்கித் சுரானா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர்.

அப்போது, தேனாம்பேட்டை நல்லான் தெருவை சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விக்னேஷ்வரன் (28), பைக்கை திருடியது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்திய போது, குற்ற சம்பவத்தில் ஈடுபடும் போது போலீசாரிடம் சிக்காமல் இருக்க பைக் திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்தனர். அவனிடம் இருந்து பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

The post குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்த பைக் திருடிய ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Ankit Surana ,Thenampet Eldoms Road ,Dinakaran ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...