×

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

பொன்னேரி: மீஞ்சூர் அருகே, ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக பலியானான். மீஞ்சூர் அடுத்த நாலூரை சேர்ந்தவர் அருள்நீதி. இவரது மகன் பிரேம்(13). அங்குள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று இவன் தனது நண்பர்களுடன் நாலூர் இந்துஜா நகர் அருகே உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளான். அப்போது, ஏரியில் மிதந்த தெர்மாகோலை எடுப்பதற்காக, அவன் தண்ணீருக்குள் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கியுள்ளான். இதை பார்த்த அவனது நண்பர்கள் பிரேமை மீட்டு, உடனடியாக பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவன் இறந்துவிட்டதாக கூறினர். தகவலறிந்த மீஞ்சூர் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து, சடலத்தை கைப்பற்றி, அதே மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரனை நடத்திவருகின்றனர்.

The post ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Meenjur ,Arulneethi ,Meenjoor ,Nallur ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்காக பள்ளிகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை அகற்றுவதில் சிரமம்