- நேரடி நெல் கொள்முதல் மையம்
- பேராத்தூர் ஊராட்சி
- ஏ கிருஷ்ணசாமி
- சட்டமன்ற உறுப்பினர்
- திருவள்ளூர்
- திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம்
- பேராவூர்
- பஞ்சாயத்து
- நட்டகோயில் திபாய் ஊராட்சி
- A.Krishnaswamy
திருவள்ளூர், மே 8: திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், பேரத்தூர் ஊராட்சி, நத்தகோயில் திப்பை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர் தென்னவன், ஒன்றிய கவுன்சிலர்கள் எத்திராஜ், சாந்தி தரணி, ஊராட்சி தலைவர் முத்துமாரி தேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய திமுக செயலாளர் ஜெயசீலன் அனைவரையும் வரவேற்றார்.
இந்த விழாவிற்கு ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தலைமை தாங்கி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், பேரத்தூர், நத்தகோயில் திப்பை, விஷ்ணுவாக்கம் உள்ளிட்ட கிராமங்களில்ல 1500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருவதால் இங்கு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் அனைவரும் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் திருவூர், தொட்டிக்கலை ஆகிய இடங்களில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ₹1.50 கோடி மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் இந்த கிராமத்திலும் ₹1.50 கோடி மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நத்தகோயில் திப்பை கிராமத்திற்கு பேருந்து வசதியும், ரேஷன் கடையும் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள்.எனவே பொது மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக 10 நாட்களில் பேருந்து வசதியை ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தரவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதே ₹1.50 லட்சம் மதிப்பீட்டில் பேரத்தூர் கிராம சிவன் கோயிலுக்கு சாலை அமைத்து கொடுத்துள்ளேன். தற்போது சட்டமன்ற உறுப்பினராக பேரத்தூர் காலனிக்கு ₹3 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ₹28 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. எனவே உங்கள் கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார். முடிவில் நெல் கொள்முதல் அலுவலர் செங்குட்டுவன் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் தரணி, சொக்கலிங்கம், பரமேஸ்வரன், மோகன், லட்சுமி, ஜென்னி, வார்டு உறுப்பினர்கள் கிருஷ்ணகுமார், திவ்யா கார்த்திக், டில்லி, முரசொலி, மதிவாணன், நிர்வாகிகள் முரளி, பாஸ்கர், நாகரத்தினம், பாண்டுரங்கன், சுதா, சுனில், கோபால், பிரபாகர், மூர்த்தி, டி.குமரன், உதயநிதி, மூர்த்தி, ராமநாதன், சந்திரபாபு, பாபு, ஜானகிராமன், ஆயலூர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post பேரத்தூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.