×

கூடங்குளம் 2வது அணு உலையில் பராமரிப்பு பணிக்காக 3 மாதம் உற்பத்தி நிறுத்தம்

நெல்லை: நெல்லை மாவட்டம் கூடங்குளம் 2வது அணுமின் உலை மூலம் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வந்த நிலையில், வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நேற்று 2வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பராமரிப்பு பணிகள் நடக்கும் காலக்கட்டத்தில் அணுமின் உலையில் இருந்து எரிகோல்கள் மாற்றப்பட உள்ளன. இப்பணிகள் 3 மாதம் நடக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய 500 மெகாவாட் மின்சாரம் தடைபடும் என கூறப்படுகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் மின் தட்டுப்பாடு உருவாக வாய்ப்புள்ள நிலையில், பராமரிப்பு பணிகளை மழை காலத்தில் மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் இவ்வாண்டும் வழக்கம்போல் கோடை காலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

The post கூடங்குளம் 2வது அணு உலையில் பராமரிப்பு பணிக்காக 3 மாதம் உற்பத்தி நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Kudankulam ,Nellai ,Nellai district ,
× RELATED பாஜ நிர்வாகி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்