×

(தி.மலை) முத்துமாரியம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் கேளூர் கிராமத்தில்

போளூர், மே 7: கேளூர் கிராமத்தில் முத்துமாரியம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். போளூர் அருகே கேளுர் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. வருடந்தோறும் சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தன்று கூழ்வார்க்கும் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதை முன்னிட்டு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பக்தர்கள் வழிப்பட்டு வருகின்றனர். இந்த கூழ்வார்க்கும் திருவிழா முன்னிட்டு கிராம மக்கள் விரதமிருந்து அம்மனுக்கு அலங்காரம் செய்து கரகம் எடுத்து கிராமத்தில் உள்ள தெரு தெருவாக ஊர்வலம் வந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அதனை தொடர்ந்து வருடந்தோறும் விவசாயிகள் வைக்கும் பயிர்கள் நன்கு வளர்ந்து பலனை தரவும், மழை தொடர்ந்து பெய்து மக்கள் அனைவரும் நலமுடனும், வளமுடன் வாழவேண்டும் என்று பொங்கலிட்டு, அம்மனுக்கு படையலிட்டு நேர்த்தி கடன் செலுத்தி பெண்கள் ஊர்வலமாக பித்தளை குடத்தில் கூழ்களை தலையில் ஏந்தி ஊர்வலமாக வந்து கூழ் ஊற்றினர். இரவு அலங்கரிக்கப்பட்ட அம்மனை முக்கிய வீதிகளின் வழியாக சென்றனர். பகத்ர்கள் அம்மனை வழங்கி வழிப்பட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு வான வேடிக்கையும், மேளகச்சேரியும், கரகாட்டம், சிலம்பாட்டம் வாத்தியம் முழங்க அம்மன் திருவீதி உலா வந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் அ.சங்கீதாஅன்பழகன், துணை தலைவர் ஏ.தாமரைசெல்வி ஏழுமலை, அறங்காவலர் குழு தலைவர் ஜெ.மணிகண்டன் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

The post (தி.மலை) முத்துமாரியம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் கேளூர் கிராமத்தில் appeared first on Dinakaran.

Tags : T.Malai ,Muthumariamman ,Swami ,Kelur ,Polur ,Koolvarkam festival for Muthumariamman ,Kelur village ,Th ,Malai ,Koolvarka festival for Muthumariamman ,
× RELATED கட்டப்பெட்டு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா