×

ஆர். எஸ். மங்கலம் அருகே செங்கமடை கிராமத்தில் உள்ள ஆறுமுக கோட்டையை பாதுகாக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ். மங்கலம் அருகே செங்கமடை கிராமத்தில் உள்ள பாரம்பரியம் மிக்க சேதுபதி மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஆறுமுககோட்டை சேதமடைந்து உள்ளது. அதனை பராமரித்து பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆர்.எஸ் மங்கலம் அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே செங்கமடை கிராமத்தில் ஊருக்கு கிழக்கே ஆறுமுககோட்டை அமைந்துள்ளது. அப்பகுதியில் ராமநாதபுரம் சேது சீமையை ஆட்சி செய்த சேதுபதி மன்னர்களில் ஒருவரான முத்துவிஜயரகுநாத சேதுபதியால் பிரெஞ்சு பொறியாளர்களை கொண்டு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த செங்கமடை ஆறுமுக கோட்டையை செங்கல், சுண்ணாம்பு , கடுக்காய் கருப்பட்டி போன்றவை பொருட்களை கொண்டு மிக நேர்த்தியாக கட்டப்பட்டிருந்தது.

இந்த கோட்டையின் கட்டுமான அமைப்பானது 6 இதழ்களை கொண்ட ஒரு மலர் போன்ற வடிவில் அமைந்திருந்ததால், இந்த கோட்டையை ஆறுமுக கோட்டை என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.மேலும் சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோட்டையின் உள் பகுதியில் இருந்து எதிரிகளை தாக்கும் விதமாக, சுவர்களில் துளைகள் அமைக்கப்பட்டு அந்த துளைகளின் வழியாக துப்பாக்கியால் எதிரிகளை சுடும் வகையில், துளைகள் அமைக்கப்பட்டிருந்தன. கிபி 1801ல் இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த ஆங்கிலேயர்களின் மன்னர்களால் கட்டப்பட்டிருந்த கோட்டை , கொத்தானங்களை அழித்து வந்தனர்.அதே போல் இராமநாதபுரம், சேதுபதி மன்னர்களின் பல கோட்டைகளையும் அழித்தனர். அந்த காலக்கட்டத்தின் போது இக்கோட்டையும் சிதைக்கப்பட்டது.

இதில் கோட்டையின் எஞ்சிய மதில் சுவர்கள் மட்டுமே மன்னர்கள் கால கோட்டை குறித்த அடையாளச் சின்னமாக இன்றளவும் உள்ளது. மேலும் இந்த கோட்டைக்குள் மன்னர் காலத்திலேயே அங்கு உள்ள படை வீரர்களையும், மக்களையும் பாதுகாக்க வேண்டியும் போரில் வெற்றி பெற வேண்டியும், கோட்டை முனீஸ்வரர் மற்றும் காவல் தெய்வம் கருப்பசாமி என்ற தெய்வத்தையும் வைத்து படையல் போட்டு வழிபட்டு வந்துள்ளனர். இந்த தெய்வங்களானது அந்த சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடைய மிகவும் பிரசித்தி பெற்ற தெய்வமாக இன்றளவும் கருதப்பட்டு வருகிறது.இந்த கோட்டைக்குள் இருந்து வழிபட்டு வந்த தெய்வம் என்பதால் இதனை அந்த சுற்று வட்டாரப் பகுதிகளான செங்கமடை, சனவேலி, கவ்வூர், புல்லமடை, இரட்டையூரணி, சவேரியார்பட்டினம் ,இந்திரா நகர், கீழக்கோட்டை , ஆவரேந்தல், பாரனூர், வெட்டுக்குளம், கலங்காப்புலி, அத்தானூர், நாகனேந்தல், காவனூர், சித்தூர்வாடி, சேந்தனேந்தல், மொச்சியேந்தல், கண்ணாரேந்தல், பேரையூர், குலமாணிக்கம், செட்டிய மடை,பொட்டக்கோட்டை ,புலிவீரதேவன்கோட்டை ,உப்பூர், தொண்டி, ஆப்பிராய், ஏ.ஆர் மங்கலம் உள்ளிட்ட பிற கிராம மக்களால் இன்றளவும் கோட்டைய்யா என்ற பெயரோடு அழைக்கப்பட்டு வருகிறது.

கோட்டை சிதைந்து விட்ட நிலையிலும் அந்த கிராமத்தினர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமப் பொதுமக்கள் மற்றும் குலதெய்வ வழிபாட்டுகாரர்கள் உள்ளிட்டோர்களின் பங்களிப்போடு அதே கோட்டையின் உட்பகுதியில் கோட்டையா முனீஸ்வரர், கருப்பசாமிக்கு பிரமான்டமாக ஆலயம் அமைத்து, ஆண்டுதோறும் மிகவும் விமர்சையாக திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த வரலாற்று சிறப்புமிக்க கோட்டை அமைந்துள்ள பகுதியில் சுமார் 20 கி.மீ தூரத்திற்கு அமைந்துள்ள ஆற்றிற்கும் இந்த கோட்டையின் பெயருக்கு பெருமை சேர்க்கும் விதமாக அந்த ஆற்றையும் கூட கோட்டைகரை ஆறு என்றே அழைக்கப்பட்டு வந்தது. இந்த கோட்டையின் சுற்று பகுதி மற்றும் ஆற்றின் உட்பகுதியும் கருவேல முட்புதர்கள் மண்டி காடு போல் காட்சியளிகின்றனர். இதனால் இப்பகுதி முட்புதர்கள் அடர்ந்து மாசடைந்து காணப்படுகிறது.இந்த கோட்டைக்கு செல்வதற்காக திருச்சி -ராமேஸ்வரம் சாலையில் இருந்து சுமார் 1 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்த சாலை சேதமடைந்துவிட்டது. எனவே சேதுபதி மன்னர்கள் கால அடையாள சின்னங்களில் ஒன்றாகத் திகழும் பாரம்பரியமான வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோட்டையின் மதில் சுவர்களை நமதுவருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் பாதுகாத்து சீரமைத்திடவும், கோட்டைகரை ஆறு மற்றும் கோட்டை பகுதிகளில் அடர்ந்து காணப்படும் கருவேல முட்புதர்களை அகற்றிடவும். கோட்டைக்கு செல்லும் சாலையை சீரமைத்திடவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

The post ஆர். எஸ். மங்கலம் அருகே செங்கமடை கிராமத்தில் உள்ள ஆறுமுக கோட்டையை பாதுகாக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : R.R. S.S. Arumuka Fort ,Chengamada village ,Mangalam ,R. S.S. Arumukkotta ,r. ,S.S. Arumpura Fort ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் மாட்டுச் சாணத்தை கஞ்சா...