×

முன்னீர்பள்ளம் அருகே பைக்குகள் திருட்டு

நெல்லை,மே6: முன்னீர்பள்ளம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் இரு பைக்குகள் திருடு போனது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள இளையாமுத்தூர் பள்ளிக்கூடத்தெருவை சேர்ந்தவர் தளவாய் மகன் சுப்பிரமணியன் (25) லாரி டிரைவர். இவர் கடந்த 4ம் தேதி அடைமிதிப்பான் குளம் விலக்கு சாலையில் தனது பைக்கை நிறுத்தியிருந்தார். பின்னர் வந்து பார்த்த போது அவரது பைக் காணவில்லை. இதுபோல் முன்னீர்பள்ளம் அருகே உள்ள ஜோதிபுரம் ஐஆர்டி பாலிடெக்னிக் நாகர்கோவில் சாலையை சேர்ந்தவர் தாமஸ் மகன் ஆரோக்கியம் (50) தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவர் பணி செய்யும் நிறுவனத்தின் அருகில் கடந்த 4ம் தேதி பைக்கை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது பைக் மாயமாகி இருந்தது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசில் சுப்பிரமணியன், ஆரோக்கியம் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி பைக் திருடிய மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

The post முன்னீர்பள்ளம் அருகே பைக்குகள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Munneerpallam ,Nellai ,Dinakaran ,
× RELATED ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்...