×

ரயில் மோதி வாலிபர் பலி

 

மதுரை, மே 6: மதுரை அனுப்பானடி சிந்தாமணி ரயில்வே தண்டவாளத்தில் நேற்று முன்தினம் காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். தகவலறிந்த ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, வாலிபரின் உடலை கைப்பற்றி, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மதுரை கிழக்கு கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், ரயில்வே போலீஸ் எஸ்.ஐ. ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து, ரயில் மோதி இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்து வருகிறார்.

The post ரயில் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Chintamani ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை