×

சீதாபுரம் கிராமத்தில் செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மதுராந்தகம்: சீதாபுரம் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகேயுள்ள சீதாபுரம் கிராமத்தில் கிராம தேவதை செல்லியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி, கடந்த இரு தினங்களுக்கு முன்பு யாக சாலையில் கலசங்கள் அமைக்கப்பட்டு கோ பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் செய்யப்பட்டு, 4ம் நாளாள நேற்று கால யாகசாலை பூஜை செய்து நிறைவு பெற்று மகா தீபாரதனை நடைபெற்றது.

இதில், யாகசாலையில் இருந்து மேள தாளங்கள் முழங்க கொண்டு வரப்பட்டு புனித நீரை, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். இதில், சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர், பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

The post சீதாபுரம் கிராமத்தில் செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Selyamman Temple ,Kumbabhishekam ,Sitapuram Village ,Madurandakam ,Kumbabishekam ,Selyamman ,Temple ,Kumbaphishekam ,Dinakaran ,
× RELATED முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்