×

ஆட்டோவில் தவறவிட்ட 15 சவரன், ஏடிஎம் கார்டு மூதாட்டியிடம் ஒப்படைப்பு

சோழிங்கநல்லூர்: திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் சபுராபீ (63). இவர், நேற்று முன்தினம் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் துணிகள் வாங்கிவிட்டு மீண்டும் திருவல்லிக்கேணிக்கு செல்ல ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளார். அப்போது, ஆட்டோ டிரைவர் அதிக தொகை கேட்டதால், அதில் இருந்து இறங்கி உள்ளார். அப்ேபாது, ஒரு பையை ஆட்டோவில் தவறவிட்டுள்ளார். அதில், 15 சவரன் நகைகள், பணம் மற்றும் ஏடிஎம் கார்டு இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த சபுராபீ இதுகுறித்து ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, ஆட்டோ பதிவெண்ணை வைத்து விசாரித்தபோது, மணலியில் வசித்து வரும் கிஷோர் என்பவரின் ஆட்டோ என தெரியவந்தது.

உடனே செல்போன் மூலம் தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்தனர். பின்னர், கிஷோர் கொடுத்த முகவரி மூலம் அவரது வீட்டிற்கு சென்று ஆட்டோவை பார்த்தபோது, அதில் கட்டைப்பை இருந்தது. அதில், வைத்திருந்த 15 சவரன் தங்க நகை மற்றும் ரூ.1,500 மற்றும் ஏடிஎம் கார்டு இருந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றி, சபுராபீயை காவல் நிலையம் அழைத்து அவரிடம் நகை, பணத்தை ஒப்படைத்தனர்.

The post ஆட்டோவில் தவறவிட்ட 15 சவரன், ஏடிஎம் கார்டு மூதாட்டியிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : 15 ,Sawaran ,Choshinganallur ,Saburabee ,Tiruvallikkeni ,Vannarpettai ,Dinakaran ,
× RELATED நாகையில் 110 சவரன் நகைகள் கொள்ளை..!!