×

விபத்தில் மூளைச்சாவு அடைந்த மேலாளரின் உடலுறுப்பு தானம்

துரைப்பாக்கம்: ஊத்துக்கோட்டை அமைந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (33), தனியார் நதி நிறுவன உதவி மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர், கடந்த 2ம் தேதி செங்குன்றம் அருகே சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் அவர் மூளைச்சாவு அடைந்தார். இதனால், அவரது சிறுநீரகம், இதயம், நுரையீரல், கண் மற்றும் தோல் ஆகியவற்றை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். உடனடியாக, தானம் பெறப்பட்ட சிறுநீரகம், ஏற்கனவே, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பதிவு செய்து காத்திருந்த 41 வயது பெண்ணிற்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம், இதயம், மற்றும் நுரையீரல் ஆகியவை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பதிவு செய்த தனியார் மருத்துமனையில் உள்ள நோயாளிக்கு அரசு வழிமுறைப்படி வழங்கப்பட்டது.

The post விபத்தில் மூளைச்சாவு அடைந்த மேலாளரின் உடலுறுப்பு தானம் appeared first on Dinakaran.

Tags : Duraipakkam ,Soundararajan ,Oothukottai Nadalur ,
× RELATED ஒட்டுமொத்தமாக வாக்கு சதவீதம்...