×

கட்சித் தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று சரத்பவார் ராஜினாமா வாபஸ்: தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவராக தொடர்ந்து நீடிப்பார்

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக சரத்பவார் கடந்த 2ம் தேதி அறிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த முடிவை சரத்பவார் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, தேசியவாத கட்சித் தொண்டர்கள் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இதற்கிடையே புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து விவாதிக்க கட்சியின் மூத்த தலைவர்கள் 18 பேர் நேற்று காலை மும்பையில் கூடினர். அப்போது, சரத்பவாரின் ராஜினாமாவை ஏற்க மறுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது பற்றி சரத்பவாரிடம் குழுவினர் தெரிவித்தனர்.

இதையடுத்து, சரத்பவார் நேற்று மாலை கூறியதாவது: கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகும் எனது முடிவு மக்களிடம் நல்லதொரு வரவேற்பை பெறவில்லை. மாறாக, எனது முடிவுக்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் மக்கள் அதிருப்தி அடைந்தனர். எனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். தொண்டர்களின் உணர்வுகளை என்னால் அவமதிக்க முடியாது. தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குழுவின் முடிவு என்னிடம் தெரிவிக்கப்பட்டது, அதை நான் மதிக்கிறேன். எனவே, பதவியை ராஜினாமா செய்யும் முடிவை நான் திரும்பப் பெறுகிறேன்’’ என்றார். சரத்பவார் பேட்டியளித்தபோது கட்சியின் மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர். ஆனால், அஜித் பவார் வரவில்லை.

The post கட்சித் தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று சரத்பவார் ராஜினாமா வாபஸ்: தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவராக தொடர்ந்து நீடிப்பார் appeared first on Dinakaran.

Tags : Sharad Pawar ,NCP ,Mumbai ,Nationalist Congress Party ,President ,Sarathpawar ,Dinakaran ,
× RELATED மனைவியை ஆதரித்து அஜித் பவார் பிரசாரம்:...