×

கணவனால் வெட்டப்பட்ட மனைவி சாவு

விருதுநகர், மே 5: விருதுநகர் அருகே செங்கோட்டையை சேர்ந்தவர் கணேசன்(33). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி நாகபிரியா (26). இவர்களுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நாகப்பிரியாவின் நடத்தையில் சந்தேகமடைந்த கணேசன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 25ம் தேதி கணேசன் திடீரென அரிவாளால் மனைவி நாகபிரியாவை சரமாரியாக வெட்டினார்.

இதில் படுகாயமடைந்த நாகப்பிரியா மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நாகபிரியா நேற்று உயிரிழந்தார்.

The post கணவனால் வெட்டப்பட்ட மனைவி சாவு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Ganesan ,Sengottai ,Nagapriya ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...