×

சமயநல்லூர் அருகே பெண்ணிடம் செயின் பறித்த இரு வாலிபர்கள் கைது

வாடிப்பட்டி, மே 5: சமயநல்லூர் அருகே பரவை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் போஸ். இவரது மனைவி அமுதா (53). மதுரை அரசரடி மின்வாரிய அலுவலக உதவியாளரான இவர், கடந்த மாதம் 14ம் தேதி பாண்டி கோயிலுக்கு சென்று விட்டு பரவை பவர் ஹவுஸ் பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் வந்த இருவர் அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச்செயினை பறித்தனர். அதிர்ச்சியடைந்த அமுதா செயினை இறுக்கிப்பிடித்துக்கொண்டார். இருப்பினும் மர்ம நபர்கள் கையில் சிக்கிய 2.75 பவுன் செயினுடன் தப்பினர்.

இதுகுறித்து அமுதா கொடுத்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர் இந்நிலையில் நேற்று சமயநல்லூர் இன்ஸ்பெக்டர் ஆனந்தி, எஸ்ஐ ராஜேந்திரன ஆகியோர் தலைமையில் போலீசார் ரோந்து சென்றபோது தேனூர் பாலத்தின் அடியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இரு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அமுதாவின் கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்தவர்கள் அவர்கள்தான் என தெரியவந்தது. இதையடுத்து கட்டக்குளத்தைச் சேர்ந்த பெரியகருப்பு பாரதி(24), பொட்டுலுபட்டியைச் சேர்ந்த தினேஷ்(22) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

The post சமயநல்லூர் அருகே பெண்ணிடம் செயின் பறித்த இரு வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Samayanallur ,Vadipatti ,Paravai Sathyamurthy ,Amuda ,Madurai ,
× RELATED கருந்தலைப் பூச்சி தாக்கம் குறித்து...