×

வீடு புகுந்து திருடிய

மாணவர் கைதுபோச்சம்பள்ளி, மே 5: கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டியைச் சேர்ந்தவர் பழனி. பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவரான இவர், நேற்று முன்தினம் இரவு, குடும்பத்தினருடன் அப்பகுதியில் உள்ள தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார். படம் முடிந்து வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர்.

உள்ளே சென்று பார்த்த போது, அங்கு வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், உண்டியல் பணத்தை திருடும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். உடனடியாக அவரை கையும், களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்தனர். விசாரணையில், அவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருவதும் தெரிந்தது. இதையடுத்து, அவரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தர்மபுரி சிறையிலடைத்தனர்.

The post வீடு புகுந்து திருடிய appeared first on Dinakaran.

Tags : Kaitupochambally ,Palani ,Nagarasambatti, Krishnagiri district ,Dinakaran ,
× RELATED அக்கவுண்டை முடக்கியதால் ஆத்திரம்...