×

மதிமுக ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட மதிமுக ஆலோசனை கூட்டம் நெமிலிச்சேரியில் மாவட்ட அவைத் தலைவர் அட்கோ மணி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் கே.எம்.வேலு, சுஜாதா ஹேமச்சந்திரன், தனஞ்செழியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பூவை மு.பாபு சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தில், ‘மதிமுக அவைத்தலைவர் துரைசாமியை கட்சியைவிட்டு நீக்க வேண்டும், தொழிற்சங்க கட்டிடத்தை மீண்டும் மதிமுக தொழிற்சங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்’’ என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினர் பி.டி.மணி, ஒன்றிய, நகர செயலாளர்கள் கைசாலம், இரா.சங்கர், இரா.மணியரசு, பாபு, மாசி, ஏழுலை, பாண்டியன், சி.எம்.மணிகண்டன், நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் வைகோதாசன், வழக்கறிஞர் ஜி.வினோத்குமார், முருகன், சதீஷ், சதீஷ்குமார், தமிழ்வாணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post மதிமுக ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : MDMK ,Tiruvallur ,Thiruvallur District ,Madhyamik ,Council ,Nemilicherry ,District Assembly ,President ,Atko Mani ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...