×

தாமரை பூ பறிக்க சென்றபோது ஏரியில் மூழ்கி இரட்டையர் பலி

செய்யூர்: செய்யூர் அருகே ஏரியில் மூழ்கி இரட்டையர் சிறுவன், சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செய்யூர் அடுத்த பவுஞ்சூர் அருகே பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி (34). விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு, மோகன் பிரபு (8), மோகனதேவி (8), என இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். இவர்கள், இருவரும் பாலூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்நிலையில், வீட்டில் அருகே உள்ள ஏரி அருகே நேற்று விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் தாமரைப்பூ பறிக்க சென்றபோது இருவரும் நீரில் முழுகி உயிரிழந்துள்ளனர். குழந்தைகளை காணவில்லை என உறவினர்கள் ஏரி பள்ளத்தில் இறங்கி நீண்ட நேரமாக தேடியபோது சேற்றில் சிக்கி உயிரிழந்த நிலையில் இரண்டு குழந்தைகளும் சடலமாக மீட்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து அணைக்கட்டு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால், அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

The post தாமரை பூ பறிக்க சென்றபோது ஏரியில் மூழ்கி இரட்டையர் பலி appeared first on Dinakaran.

Tags : Deodur ,Dhodur ,Dookur ,Lotus ,Dinakaran ,
× RELATED செய்யூர் தொகுதியிலுள்ள அனைத்து...