×

பாகிஸ்தான் மாஜி பிரதமர் இம்ரானுக்கு ஜாமீன் நீட்டிப்பு: தள்ளுமுள்ளுவில் மீண்டும் கால்முறிவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 9 வழக்குகளில் ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளது. நேற்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் நீட்டிப்பு கோரிய அவரது மனு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது இம்ரான் நீதிமன்றத்துக்கு வந்தார். இதில் 9 வழக்குகளில் அவரது ஜாமீனை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இம்ரான் கான் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானபோது சிலர் தள்ளி விட்டதில் அவரது காலில் மீண்டும் முறிவு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடந்த பேரணியின் போது நடந்த துப்பாக்கிசூட்டில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

The post பாகிஸ்தான் மாஜி பிரதமர் இம்ரானுக்கு ஜாமீன் நீட்டிப்பு: தள்ளுமுள்ளுவில் மீண்டும் கால்முறிவு appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Imran Bail ,ISLAMABAD ,Imran Khan ,Imran ,Dinakaran ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா