×

ஓசூரில் சீதாராம திருக்கல்யாணம்

 

ஓசூர், மே 4: ஓசூரில் ராம ஆஞ்சநேய பக்த மண்டலி டிரஸ்ட் சார்பில், 19வது ஆண்டு திருக்கல்யாண வைபவ உற்சவம் கோலாகலமாக நடந்தது. முதல் நாளில், விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி, அனுமான் சாலிசா பாராயணம் மற்றும் உஞ்சவிருத்தி நடந்தது. இதையடுத்து, நங்கவரம் மணிகண்டேஸ்வர பாகவதர் குழுவினரால் குரு கீர்த்தனைகள், சாது அபங்கம், அஷ்டபதி, திவ்ய நாம பாராயணம் ஆகியன நடந்தது.

தொடர்ந்து மாலையில் மாப்பிள்ளை அழைப்பு என்று அழைக்கப்படும் ஜானவாசம் நடைபெற்று, விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் நடந்தது. விழாவின் 2ம் நாள் அதிகாலையில், ருத்ர பாராயணத்துடன் துவங்கி, சீர் வரிசைகள் கொண்டு வரப்பட்டு தோலோற்சவம் நடந்தது. ராம நாம பஜனைகள் நடந்ததை தொடர்ந்து மாங்கல்யதாரண வைபவம் நடந்தது. பின்னர், ஆஞ்சநேய உற்சவம் மற்றும் மங்கள ஆரத்தி வைபவம் நடந்தேறியது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

The post ஓசூரில் சீதாராம திருக்கல்யாணம் appeared first on Dinakaran.

Tags : Sitarama Thirukalyanam ,Hosur ,Rama Anjaneya Bhakta Mandali Trust ,Thirukalyana Vaibhava ,Sitarama ,Thirukalyanam ,in ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் அதிகாரி நேரில் ஆய்வு