×

டூவீலர் மோதி பள்ளி மாணவன் படுகாயம்

 

சாத்தூர், மே 4: சாத்தூர் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் பள்ளி மாணவன் பலத்த காயமடைந்தார்.தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டி மேலத் தெருவை சேர்ந்தவர் உமாதேவி(33). இவர் தனது குழந்தைகளுடன் கோடை விடுமுறைக்காக தனது அம்மா வீடான சாத்தூர் அருகே இருக்கும் அமீர்பாளையத்திற்கு வந்துள்ளார்.

மகன் நாகபிரகாஷ்(10) சாத்தூர் கோவில்பட்டி சாலையை நேற்று அதிகாலை கடந்து சென்ற போது பதிவெண் தெரியாத இருசக்கர வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். காயமடைந்தவரை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post டூவீலர் மோதி பள்ளி மாணவன் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Chatur ,Kalingapatti, Tenkasi ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?