சென்னை: ‘‘பாமக மற்றும் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திண்டிவனத்தில் வரும் 6ம்தேதி நடக்கிறது’’ என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. பாமக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களின் கூட்டுக் கூட்டம் வரும் 6ம்தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு திண்டிவனம் கே.ஆர்.எஸ் அம்மா திருமண அரங்கத்தில் நடைபெறும்.
பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி, கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி, பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா மற்றும் இரு அமைப்புகளின் மாநில அளவிலான நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கூட்டத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் அனைத்து மாவட்ட செயலர்கள், மாவட்ட தலைவர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post திண்டிவனத்தில் வரும் 6ம்தேதி பாமக, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: கட்சி தலைமை அறிவிப்பு appeared first on Dinakaran.