×

பெட்ரோனாஸ், காட்டர்பில்லர் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்..!!

சென்னை: பெட்ரோனாஸ், காட்டர்பில்லர் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. நிதிநிலை அறிக்கை, மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், பெட்ரோனாஸ், காட்டர்பில்லர் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே திருவள்ளூரில் காட்டர்பில்லர் நிறுவனம் செயல்படும் நிலையில் கூடுதலாக முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் சென்னை வருகை, மதுரை மற்றும் திருவாரூரில் நடைபெற உள்ள விழாக்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர்களுடன் நடைப்பெற்ற ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post பெட்ரோனாஸ், காட்டர்பில்லர் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்..!! appeared first on Dinakaran.

Tags : Petronas ,Caterpillar ,Tamilnadu ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகளில் திடீர் சோதனை..!!